states

img

பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் - டெங்கு நோயாளி உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில், டெங்கு நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை உடம்பில் செலுத்தியதால், நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் பிரயாக்ராஜில் பிரதீப் பாண்டே என்பவர் டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்டு குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை பிரதீப் உடலில் செலுத்தப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலி ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்ட பிளாஸ்மா என்று இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதாக் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.